Saturday, March 31, 2018

ஆதார் தகவல்கள் எங்கெல்லாம் பயன்படுத்தப்பட்டுள்ளன?: தனி நபர் அறிந்துகொள்ள UIDAI இணையதளத்தில் வசதி

Image result for AADHAAR
ஆதார் தகவல்கள் பாதுகாப்பாக உள்ளதா என பொதுமக்கள் மத்தியில் அச்சம் நிலவும் வேளையில் தனி நபர், அவரது ஆதார் விவரங்கள் எங்கெல்லாம் பயன்படுத்தப்பட்டுள்ளன என்பதைஅறியும் வசதி யுஐடிஏஐ இணையதளத்தில் வழங்கப்பட்டுள்ளது.
மத்திய, மாநில அரசுகளின் நிதி சார்ந்த சேவைகள், நலதிட்டங்கள், மானியங்கள் உள்ளிட்டவற்றை உண்மையான பயனாளிகளிடம் சேர்ப்பதற்காக ஆதார் கொண்டுவரப்பட்டது.

இளைஞர்களின் வித்தியாச அழைப்பு! ஏப்ரல் ஃபூல் வேண்டாமே.. "ஏப்ரல் கூல்" போதுமே.....

முட்டாள்கள் தினம்...!

ஏப்ரல் 1-ம் தேதியை நண்பர்கள், குடும்பத்தினர் போன்றோரிடம் வேடிக்கை செய்வதும், அவர்களை முட்டாளாக்கி மகிழ்வதையும் உலகம் முழுவதுமுள்ள மக்கள் கொண்டாடி வருகின்றனர். ஆங்கில மோகம்... இதிலும் நம்மை விட்டுவைக்கவில்லை...
          முட்டாள்கள்தினம் ஐரோப்பிய நாடுகளில் எதற்காக ஆரம்பிக்கப்பட்டது என்பதற்கு வரலாற்று காரணங்களும், நகைச்சுவை காரணங்களும் பல கூறப்படுகின்றன. உறுதியான காரணம் இதுவரை சரியாக தெரியவில்லை. அப்படியே தெரிந்தாலும் அதனால் நமக்கேதும் நிகந்துவிடபோவது இல்லை.

Friday, March 30, 2018

கூட்டுறவு சங்கத் தேர்தலுக்கு தடை கோரி வழக்கு

கூட்டுறவு சங்கத் தேர்தலுக்கு தடை விதிக்கக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.

வேலூர் மாவட்டம் தக்கோலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் உப்பு உற்பத்தி மற்றும் விற்பனை கூட்டுறவு சங்கங்களின் தேர்தலுக்குத் தடை விதிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.


இதுதொடர்பாக வேலூரைச் சேர்ந்த அசோக்குமார் உள்ளி்ட்ட 4 பேர் மற்றும் நாகப்பட்டினத்தைச் சேர்ந்த மாசிலாமணி ஆகியோர் தாக்கல் செய்த மனுக்களில், ஆளுங்கட்சியைச் சேர்ந்த வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்பதற்காக கூட்டுறவு சங்க அதிகாரிகள் முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளனர்.

எதிர்க்கட்சி வேட்பாளர்களின் மனுக்களை அவர்கள் பெறுவதில்லை. மீறிப் பெற்றாலும் அற்ப காரணங்களைக் கூறி அவற்றை நிராகரித்து வருகின்றனர். தற்போதுள்ள சூழலில் தேர்தல் நடந்தால் அது முறையாக நடக்காது. எனவே தேர்தலுக்கு தடை விதிக்க வேண்டும். இவ்வாறுஅதில் கோரியுள்ளனர்.

வருமான வரி தாக்கல் செய்ய இதுவே இறுதி கெடு!

சென்னை 'வரும், 31க்கு பின், வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய முடியாது' என, வருமான வரித்துறை அதிகாரிகள் கூறினர்.

கடந்த, 2015-2016 மற்றும், 2016-2017ம் ஆண்டுகளுக்கான வருமான வரிக்கணக்கை, நாளைக்குள் தாக்கல் செய்வதற்கான பணிகளை, வருமான வரி செலுத்துவோர், துரித கதியில் செய்து வருகின்றனர்.இந்த நிலையில், சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரி அலுவலகத்தில், வருமான வரி தாக்கல் செய்பவர்களுக்கு, உதவி செய்வதற்காக, துறை சார்ந்த, 30பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், இணையதளம் வழியாக தாக்கல் செய்ய முடியாதவர்களுக்கு, வருமான வரிக் கணக்கை தயார் செய்து கொடுக்க, தனியார் நிறுவனத்தைச் சார்ந்த பணியாளர்கள், சிறப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதற்கான சிறப்பு கவுன்டர்கள், 22ம் தேதியிலிருந்து செயல்பட்டு வருகின்றன.

RMSA SSA TEACHER EDUCATION (DIET) மூன்றையும் ஒருங்கினைத்து மத்திய அமைச்சரவை ஒப்புதல்.

உதவி பெரும் பள்ளி ஆசிரியர்களுக்கு சிக்கல்?

Thursday, March 29, 2018

ஆசிரியர் வாஞ்சிநாதனை மீண்டும் பணியில் அமர்த்தவேண்டும் என்று வலியுறுத்தி மதுரையில் நடைபெறும் உண்ணாவிரதப் போராட்டத்தில் மேலூர் TNPTF சார்பாக பங்கேற்பு

வட்டார வள மேற்பார்வையாளர்கள் பணி விடுவிப்பு- SSA செயல்பாடுகள் முடங்கும் அபாயம்


RTE - 2018-19 ம் கல்வி ஆண்டில் இலவச கட்டாய கல்வி சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில், எல்.கே.ஜி., அல்லது முதல் வகுப்பு சேர்க்கை அறிவிப்பு!!!



பள்ளிக் கல்வி செயலர் ஆசிரியர்களை ஒருங்கிணைக்கும் முயற்சியாக "கைசாலா குழு" - வில் இணைய அழைப்பு

Friends Our Principal secretary advised to use kaizala chatting app which has advanced facilities and limitless members. Interested teachers click the below link and join
You are invited to Microsoft Kaizala group: Palli.in. Click https://join.kaiza.la/p/_AsUOESUQuiS4bMqOKj4Aw
to download the app and get connected with teachers around the state ,nation, and globe

நம் பள்ளிக் கல்வி செயலர் ஆசிரியர்களை ஒருங்கிணைக்கும் முயற்சியாக கைசாலா குழுவில் எத்தனை ஆசிரியர்கள் வேண்டுமானாலும் இணையலாம்
நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து செயலி தரவிறக்கம் செய்து இணையலாம்.
You are invited to Microsoft Kaizala group: Palli.in. Click https://join.kaiza.la/p/_AsUOESUQuiS4bMqOKj4Aw

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் TNPTF செய்தி


Tuesday, March 27, 2018

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணிமேலூர் வட்டாரம் (கிளை

Google Forms
Having trouble viewing or submitting this form?
Fill out in Google Forms
Membership 2018
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மேலூர் வட்டாரம் (கிளை
உறுப்பினர் சேர்க்கை 2017-2018
Create your own Google Form

CPS NEWS - இன்று மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்யக்கோரி தொடரப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது!


டிபிஐயில் ஒரே நேரத்தில் 4 போராட்டம்-ஆசிரியர்கள் முற்றுகை





டிபிஐ வளாகத்தில் உள்ள ஆசிரியர் தேர்வு வாரியம் முன்பு ஒரே நேரத்தில் 4 பிரிவு ஆசிரியர்கள் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டதால்  டிபிஐ வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. 

1,6, 9 மற்றும் பிளஸ்1 வகுப்புகளுக்கு 3டி, இணையதள லிங்க், பார்கோடுடன் 100 தலைப்பில் 1.70 கோடி புத்தகங்கள்: மே மாதம் பள்ளிகளுக்கு வழங்க முடிவு -

1,6,9 மற்றும் பிளஸ் 1 வகுப்புகளுக்கு பல புதிய நவீனங்கள் அடங்கிய புதிய பாடப்புத்தகங்கள் வழங்குவதற்காக அவற்றை அச்சிடும்  பணிகள் முடிய உள்ளன. மே இறுதி வாரத்தில் பள்ளிகளுக்கு வழங்க பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது.








தமிழகத்தில் 15 ஆண்டுகளுக்கு பிறகு பாடத்திட்டம் மாற்றிஅமைக்கப்படுகிறது. வரும் கல்வி ஆண்டில் 1, 6, 9 மற்றும் பிளஸ் 1 வகுப்புகளுக்கு புதிய  பாடத்திட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்ட புத்தகங்கள் வழங்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்து இருந்தார். 

Monday, March 26, 2018

மேலூர் TNPTF செயற்குழு

Google Forms
Having trouble viewing or submitting this form?
Fill out in Google Forms
I've invited you to fill out a form:
மேலூர் TNPTF செயற்குழு
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, மேலூர் வட்டாரக் கிளையின் செயற்குழு உறுப்பினர்கள் விபரப் பட்டியல்
Create your own Google Form

Friday, March 23, 2018

மத்திய அரசு ஊழியர்களுக்கு 20 லட்சம் வரை பணிக்கொடை கிடைக்கும்: மசோதா நிறைவேறியது

பணிக்கொடை உச்சவரம்பை இரட்டிப்பாக்க மத்திய அரசு முடிவு செய்தது. இதற்காக ‘பணிக்கொடை திருத்த மசோதா’ என்ற பெயரில் புதிய மசோதா நாடாளுமன்ற மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.

அங்கு இந்த மசோதா கடந்த 15–ந் தேதி நிறைவேறியது.இதைத்தொடர்ந்து இந்த மசோதாவை மாநிலங்களவையில் நேற்றுமத்திய தொழிலாளர்துறை மந்திரி சந்தோஷ்குமார் கங்வார்தாக்கல் செய்தார். இந்த மசோதாவை விவாதமின்றி நிறைவேற்ற வேண்டும் என ஏராளமான உறுப்பினர்கள் அவைத்தலைவரை கேட்டுக்கொண்டனர். அதன்படி உறுப்பினர்கள் அனைவரின் ஆதரவுடன் குரல் ஓட்டு மூலம் இந்த மசோதா நிறைவேறியது.

நாடாளுமன்ற இரு அவைகளிலும் இந்த மசோதா நிறைவேறி இருப்பதன் மூலம், தொழிலாளர்களின் பணிக்கொடை உச்சவரம்பு ரூ.20 லட்சமாக உயர்கிறது. மேலும் பெண் தொழிலாளர்களின் பிரசவ விடுப்பை, பணி நாட்களாக கருதுவதற்கான அதிகாரத்தையும் இந்த மசோதா வழங்குவது குறிப்பிடத்தக்கது.

SMC : பள்ளி மேலாண்மை குழு கூட்டம் - செய்தி துளிகள்


தலைமை ஆசிரியர் அனைவருக்கும் வணக்கம் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் இம்மாதம் இருமுறை நடத்த  வேண்டும் 23,28 இரு நாட்களில் 23 ம் தேதி பள்ளி வளர்ச்சி திட்டம் எனும் தலைப்பில் நடத்த வேண்டும்.

மாணவர் சேர்க்கை பள்ளியின் அடிப்படை தேவைகளை நிறைவு செய்தல் கல்வி முன்னேற்றம் முக்கியமாக இடம் பெற வேண்டும் 28 ஆம் தேதி சமுக தனிக்கை பள்ளி, பராமரிப்பு மானிய செலவு விவரங்களை அனைவருக்கும் தெரியப்படுத்த வேண்டும் இ்ரு நாள் சிறப்பு மேலாண்மை குழு கூட்டம் அனைத்து பள்ளிகளும் தவறாமல் நடத்த வேண்டும்.

இதற்காக உங்கள் கணக்கில் ரூ 1080 ஒவ்வொரு பள்ளிக்கும் வழங்கப்பட்டுள்ளது அதனை இரு நாள் கூட்டத்திற்கு செலவினமாக பயன்படுத்தி  பற்றுச்சீட்டு பயன்படுத்த வேண்டும் கட்டாயம் புகைப்படம் எடுக்க வேண்டும்.

மேலும் பதிவேட்டில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.

Sunday, March 18, 2018

பொதுத் தேர்வு வினாத்தாள் கடினம் - கருணை மதிப்பெண் வழங்குவது குறித்து அரசு பரிசீலனை - அமைச்சர் செங்கோட்டையன்

10 மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்குவது குறித்து அரசு பரிசீலனை செய்வதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். 10 மற்றும் 11ஆம் வகுப்பு தேர்வு வினாத்தாள் கடினமாக இருந்தது பற்றி கேள்விக்கு இவ்வாறு பதிலளித்துள்ளார்.

26.02.2018 அன்று உதவித் தொடக்கக்கல்வி அலுவலர்களிடம் நடத்திய சந்திப்பின்போது அலுவலர்கள் அளித்த வாக்குறுதி நிறைவேற்றப் படாததால் - 15.03.2018ல் நினைவூட்டல் கடிதம் அளிக்கப்பட்டது.


Saturday, March 17, 2018

புறக்கணிக்கப்படும் பட்டதாரி ஆசிரியர்கள் : பாரபட்சத்தால் அதிருப்தி

பத்தாம் வகுப்பு தேர்வு பணியில் தேர்வு மைய முதன்மை கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்ட மூத்த பட்டதாரி ஆசிரியர்களின் அலுவலக பணிக்கு ஊழியர் நியமிக்காததால் கண்காணிப்பு பணி பாதிப்பதாக புகார் எழுந்துள்ளது.

பத்தாம் வகுப்பு தேர்வையொட்டி தேர்வு மைய முதன்மை கண்காணிப்பாளர்களாக உயர்நிலை பள்ளி தலைமையாசிரியர் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர் நியமிக்கப்படுவர். இரண்டு ஆண்டுகளாக உயர்நிலை பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு வழங்கப்படாததால் முதன்மை கண்காணிப்பாளர் நியமனத்தில் சிக்கல் நீடித்தது.

இதனால் அப்பணிக்கு மூத்த பட்டதாரி ஆசிரியர்கள் இந்தாண்டு நியமிக்கப்பட்டனர். ஆனால் தலைமையாசிரியர்களுக்கு வழங்குவது போல் எழுத்தர், அலுவலக உதவியாளர் (ஓ.ஏ.,) ஒதுக்கீடு பட்டதாரி ஆசிரியர்களுக்கு வழங்கப்படவில்லை.இதனால் கண்காணிப்பு பணியுடன் பேப்பர் பண்டல் பிரிப்பது, ஒரு மணிநேரத்திற்கு ஒரு முறை மணி அடிப்பது உட்பட ஓ.ஏ.,க்கள் பணியையும் அவர்கள் கூடுதலாக கவனிக்கின்றனர். 

இதனால் கண்காணிப்பு பணியில் முழு கவனம் செலுத்த முடியவில்லை என புகார் எழுந்துள்ளது.பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட செயலாளர் முருகன் கூறுகையில், "தலைமையாசிரியர் பற்றாக்குறையால் கடைசி நேரத்தில் பட்டதாரி ஆசிரியரை முதன்மை கண்காணிப்பாளராக நியமித்தனர். இதனால் பிரச்னை ஏற்பட்டது. அடுத்தாண்டு முன்கூட்டியே திட்டமிட வேண்டும். பற்றாக்குறை இருந்தாலும் கூடுதலாக தின ஊதியம் கொடுத்து, வினாத்தாள் கட்டுக் காப்பு மையத்தில் இரண்டு தலைமையாசிரியர்களை ஏன் நியமிக்க வேண்டும். அந்த இடத்தில், ஒரு பட்டதாரி ஆசிரியரை நியமிக்கலாம்," என்றார்.

Wednesday, March 14, 2018

👍🌹🌹 சாதனை🌹🌹👍 TNPTF - க்கு அடுத்த வெற்றி

சிவகங்கை மாவட்டத்தைச் சார்ந்த திருமதி.சுகுமாரி ஆசிரியர் அவர்களின் சிறுநீரக சிகிச்சைக்காக ரூ.24000/- மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. 

இதனையடுத்து இப்பிரச்சனை மாநில மையத்தின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. மாநில மையம் உடனடியாகத் தலையிட்டதன் அடிப்படையில் NHIS - மூலம் தொகை ரூ.1,09,888/- ஐ பெற்றுக் கொடுத்தது TNPTF மாநில மையம்.

இது TNPTFன் மகத்தான சாதனை ||
-🌹🌹🌹🌹🌹🌹🌹

Sunday, March 11, 2018

CCE E-Register (I-VIII) 2018

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

CCE E-Register (I-VIII) 2018 

Click Here to Download
👇👇👇👇
https://drive.google.com/file/d/18lJCweV39KyG8mUa5h5bE2fJKuWpNA4R/view?usp=sharing

🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺

 Instruction for Enable Macro

Click Here to Download
👇👇👇👇
https://drive.google.com/file/d/0B-3ReewWcBULU1JIQVlrMUR6ckk/view?usp=sharing

💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

Wednesday, March 7, 2018

Census E-Register 2018

Census E-Register 2018 
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

Click Here to Download
👇👇👇👇
https://drive.google.com/open?id=1SCv35R8FbXiVpxc0IJipYgbuz_zdUaIC

🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺

 Instruction for Enable Macro

Click Here to Download
👇👇👇👇
https://drive.google.com/file/d/0B-3ReewWcBULU1JIQVlrMUR6ckk/view?usp=sharing

💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

Sunday, March 4, 2018

தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி - தேர்தல் முடிவுகள்

 

தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் 12வது மாநிலத் தேர்தல் முடிவுகள்

மாநிலத் தலைவர்
தோழர். மு.மணிமேகலை (திருநெல்வேலி மாவட்டம்)

பொதுச் செயலாளர்
தோழர்.ச.மயில் (தூத்துக்குடி மாவட்டம்)

மாநிலப் பொருளாளர்
தோழர் க.ஜோதிபாபு (திருவண்ணாமலை)

துணை பொதுச் செயலாளர்
த.கணேசன் (திண்டுக்கல்)

லஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி...? ஓர் விழிப்புணர்வு அறிக்கை....!!!



I)ஒவ்வொரு மாவட்டத் தலைநகரிலும் செயல்படும், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸார், (லஞ்ச ஒழிப்புத்துறை), அந்தந்த மாவட்டத்தின் எஸ்.பி. கட்டுப்பாட்டிலோ, அல்லது கலெக்டரின் கட்டுப்பாட்டிலோ கிடையாது. லஞ்ச ஒழிப்பு துறை அமைப்பானது,


முற்றிலும், சென்னையில் தலைமைச்செயலகத்தில் இயங்கி வரும் CHIEF SECRETARY அந்தஸ்த்தில் உள்ள VIGILANCE COMMISSIONER- அவர்களின் கட்டுப்பாட்டிலும், சென்னை ஆலந்தூரில் உள்ள DGP அல்லது ADDL.DGP அந்தஸ்த்தில் உள்ள,ஒரு மூத்த IPS அதிகாரியின் தலைமையில் இயங்கிவரும்,DVAC என்றழைக்கப்படும் "Directorate of Vigilance and Anti-Corruption" என்ற இயக்குநரகத்தின் கட்டுப்பாட்டிலும் மட்டும்தான் செயல்படுகின்றனர். இன்னும் சொல்லப்போனால், மேற்சொன்ன மாவட்ட அதிகாரிகளின் செயல் பாடுகளையே கண்காணித்து, தவறு இறுப்பின் நடவடிக்கை எடுக்க கடமைப்பட்டவர்கள்.


Saturday, March 3, 2018

துறை தேர்வில் புதிய பாட திட்டத்தின் கீழ் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய தாள்கள்

TNPSC: May-2018 துறை தேர்வு விண்ணப்பங்கள்  வரவேற்க்கப் பட்டுள்ளன.

விளம்பர எண்: 492
விளம்பர நாள்: 01.03.2018


விண்ணப்பிக்க கடைசி நாள் 16.04.2018



துறை தேர்வில் புதிய பாட திட்டத்தின் கீழ் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய தாள்கள்

இடைநிலை ஆசிரியர்கள்

1. 065- Tamil Nadu School Education Department Administrative Test – Paper - I -
 Higher Secondary / Secondary / Teacher Training and Special School

2. 072-Tamil Nadu School Education Department Administrative Test – Paper - II -  Elementary / Middle and Special Schools

3.  124 - Account Test for Subordinate Officers - Part I .

(or)

4.152-The Account Test for Executive Officers

5.172 - The Tamil Nadu Government Office Manual Test

பட்டதாரி ஆசிரியர்கள் முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள்

1 . 124 - Account Test for Subordinate Officers - Part I .(or)
152.The Account Test for Executive Officers

2 . 172 - The Tamil Nadu Government Office Manual

துறை தேர்வில் மற்ற அலுவலர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய தாள்கள்

1 . 124 - Account Test for Subordinate Officers - Part I .

2 . 172 - The Tamil Nadu Government Office Manual

ரூ.3 கோடியில் ஆசிரியர் இல்லத்திற்கான இடம் மீண்டும் மாற்றம் :மதுரை மாட்டுத்தாவணியில் ஒரு ஏக்கரில் அமைகிறது

மதுரையில் மூன்று கோடி ரூபாயில் ஆசிரியர் இல்லம் கட்டுவதற்கான இடம் நான்காவது முறையாக மாற்றம் செய்யப்பட்டது. வெளி மாவட்ட ஆசிரியர், அதிகாரிகள் நலன்கருதி முதல்வராக ஜெயலலிதா இருந்தபோது சட்டசபையில் 110 விதியின் கீழ் கோவை, திருச்சி, மதுரையில் தலா 3 கோடி ரூபாயில் ஆசிரியர் இல்லங்கள் கட்டப்படும்,' என அறிவித்தார்.

Thursday, March 1, 2018

TNPTFன் 12 வது மாநிலத் தேர்தல்

NHIS மருத்துவ சிகிச்சைக்கான தொகையை பெற்றுத்தந்தது TNPTF

அனைவருக்கும் வணக்கம்.

 கோவை மாவட்டம் மதுக்கரை ஒன்றிய ஆசிரியருக்கு நடைபெற்ற அறுவை சிகிச்சைக்கு NHIS மூலம் சிகிச்சை செய்ய மருத்துவ நிர்வாகம் மறுப்பு தெரிவித்த போதும்,

 அவர்களுடன் போராடி 90% பணத்தை பெற்றுத் தந்த விருதுநகர் மாவட்டச் செயலாளர் திரு.வைரமுத்து அவர்களுக்கும், விருதுநகர்பொ மாவட்டப் பொருளாளர் திரு.செல்வ கணேஷ் அவர்களுக்கும்

 கோவை மாவட்டம் மதுக்கரை ஒன்றியம் சார்பாக மிகுந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.


இப்படிக்கு,
ஜெ.மலர் வேந்தன்
வட்டாரச் செயலாளர்
மதுக்கரை 
கோவை மாவட்டம்